தமிழக செய்திகள்

ஈரோட்டில் துணிகரம்; வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டி மீது தாக்குதல்

ஈரோடு கொல்லம்பாளையம் தாயுமானவர் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஈரோடு பொன் வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் சதீசின் தாய் புனிதவதனி (வயது 70) வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் மர்மநபர்கள் 2 பேர் தீடீரென புகுந்தனர். 2 பேருக்கும் சுமார் 30 வயது இருக்கும். அவர்களை பார்த்ததும் புனிதவதனி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவர்கள் புனிதவதனியை தாக்கி படுக்கை அறைக்குள் தள்ளிவிட்டனர்.

நகை கொள்ளை

மேலும் புனிதவதனி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அவர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து