தமிழக செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடக்கும் இடம் மாறுகிறது - தமிழக அரசு ஆலோசனை

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு சாபில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது அந்த பகுதி முழுவதும், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தடுப்பு அமைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடத்தை மாற்ற அரசு முடிவு செய்தது.

காமராஜா சாலையிலேயே அருகில் மற்றொரு இடத்தில் குடியரசு தின விழாவை நடத்தலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது 2 இடங்களை அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, உழைப்பாளா சிலை முன்பாக அல்லது விவேகானந்தா இல்லம் முன்பாக மேடை அமைத்து குடியரசு தின விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இடத்தை இறுதி செய்வது தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் அதில் பங்கேற்றனர். அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முடிவு செய்யப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி