தமிழக செய்திகள்

ஓ.பி.எஸ்.க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் 18-ம் தேதி தீர்ப்பு

அ.தி.மு.க.கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 18-ல் தீர்ப்பு வழங்கிறது சென்னை ஐகோர்ட்டு.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

எனவே, அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் மார்ச் 12ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் வரும் 18-ம் தேதி பிற்பகல் 2.15க்கு ஐகோர்ட்டு தீர்ப்பளிக்கிறது.

வழக்கு முடியும்வரை கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு