தமிழக செய்திகள்

மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது

மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை,

தமிழ் தேசிய மூத்த சிந்தனையாளர் அருகோ என்கிற அரு.கோபாலன் (வயது 88). சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த இவர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி இறந்தார். கடந்த 1958-ம் ஆண்டில் சி.பா.ஆதித்தனார், நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியபோது அவருடன் இணைந்து அருகோ பணியாற்றினார்.

'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு 'சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது' அருகோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. மறைந்த அருகோவின் படத்திறப்பு மற்றும் குடும் பத்திற்கு நிதி உதவி வழங்கல் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தெய்வநாயகம் பள்ளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மணியரசன், சீமான், வேல்முருகன் உள்பட தமிழறிஞர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.