தமிழக செய்திகள்

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் கைது செய்வதை தடை செய்ய முடியாது - சென்னை ஐகோர்ட்

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருவரும் கைது செய்யப்படுவதை தடை செய்ய முடியாது என்றும் ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். #Vetrivel #ThangaTamilSelvan #ChennaiHC

சென்னை

டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் இருவரும் நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.

தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனால் அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கை அடுத்து விரைவில் அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கையடுத்து வெற்றிவேல் தலைமறைவாகியுள்ளார் எனப் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெற்றிவேலின் வீடு, அலுவலகங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் இருவரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளனர்

இந்த மனு மீதான விசாரணையின் போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் கைது செய்யப்படுவதை தடை செய்ய முடியாது என்று ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். இருவரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கோட்டை போலீஸ் தொடர்ந்த வழக்கில் குற்றஎண் இல்லாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...