தமிழக செய்திகள்

விக்கிரவாண்டி - 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, காணை ஆகிய மையங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதால் வாக்கு செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து