தமிழக செய்திகள்

பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 14 வாரங்கள் நடைபெறும். இந்நிலையில், ஆணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு இக்கோவிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் 108 பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, தேரில் பவானி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், உற்சவர் வெள்ளி கவசத்திலும் பிரகார புறப்பாடு நடந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை