தமிழக செய்திகள்

கிராம சபை கூட்டம்

மேலஆத்தூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

ஆறுமுகநேரி:

காந்தி ஜெயந்தியையொட்டி மேலஆத்தூரில் கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலர் மேரி கவிதா முன்னிலை வகித்தார். கிராம பஞ்சாயத்து செயலர் சுமதி வரவேற்று பேசினார்.

கிராம நிர்வாக அலுவலர் ஜெய்லானி பீவி, தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்பெல்மென், மேலஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஞானதுரை, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பக்கிர் முகைதீன் நன்றி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்