தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி திருநாள்: அண்ணாமலை வாழ்த்து

வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறட்டும்.

வாழ்வில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகி, குடும்பத்தில் அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திருக்கட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT