தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரெயில் (06151) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (06152) வருகிற 8-ந் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுவர் வழியாக மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு