சென்னை,
கோவில்களில் விஐபி தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை,
* பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோவிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்
* கோவில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்
* முக்கியப் பிரமுகர்களை கோவில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது
* விஐபிக்கள் வருகையின்போது கோவிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது
* விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.