விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருடைய ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறியதில் 15 ஆடுகள் பலியாகின.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது ஆட்டு தொழுவத்திற்குள் புகுந்த 3 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்குதறின.
இதில் 15 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மகாலிங்கம் கோரிக்கை விடுத்தார்.