தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுதலை செய்ய கோரி தொண்டர் தீ குளிக்க முயற்சி...!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விடுதலை செய்ய கோரி அதிமுக தொண்டர் ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்துள்ளார்

திருவண்ணாமலை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுகவினர் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா சிலை அருகே அதிமுகவினர் கண்டன் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பழகன்(வயது61) என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் தீ குளிக்க முயன்றார். இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு