தமிழக செய்திகள்

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

அ.தி.மு.க. ஒற்றை தலைமை பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

தினத்தந்தி

நாமக்கல்லில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல், மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நஷனல் ஹெரால்டு வழக்கில் தங்களை கோர்ட்டில் குற்றமற்றவர்கள் என நிரூபிப்பதற்கு பதிலாக கட்சியினரை தூண்டிவிட்டு ஆங்காங்கே போராட்டம் நடத்துவது சட்டம் மற்றும் நீதித்துறையை அவர்கள் மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பொதுமக்கள் பிரச்சினையாக கருத வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் பிரச்சினையை வேறு விதமாக தூண்டுகிறார். இது தவறான முன் உதாரணமாகும். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் ஒற்றை தலைமை பிரச்சினையானது, முழுக்க முழுக்க அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். அதில் பா.ஜ.க. ஒருபோதும் தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட பொது செயலாளர்கள் சத்தியபானு, வடிவேல், துணைத்தலைவர்கள் மகேஸ்வரன், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை