தமிழக செய்திகள்

வார்டு பகுதி சபை கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியின் ஆர்.வி.நகரில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாநகராட்சியின் 23-வது வார்டு ஆர்.வி.நகரில் வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். இதில் ஆர்.வி.நகர், முனியப்பன் கோவில்தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டன. அப்போது சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும், தெருநாய்கள் தொல்லையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் உறுதியளித்தார். இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்