தமிழக செய்திகள்

புழல் சிறை வளாகத்தில் வார்டன் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மத்திய புழல் சிறை வளாகத்தில் வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் காசிராமன்(வயது 29) .இவர் மத்திய புழல் சிறையில் விசாரணை கைதி சிறையில் கடந்த 5 வருடங்களாக வார்டனாக பணியாற்றி வருகிறார்.

இவர் புழல் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் காசிராமன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...