தமிழக செய்திகள்

மேம்பால பணிக்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்தது

மேம்பால பணிக்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்தது

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் முதல் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் டி.வி.எஸ். மேடு தனியார் மருத்துவமனை அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளிபாளையம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் ஒன்று உடைந்தது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறி சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளம் முழுவதும் நிரம்பி சாலையில் ஓடியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்