தமிழக செய்திகள்

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்; அமைச்சர் வேலுமணி

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம் என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதுடெல்லிக்கு சென்றுள்ள தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசும்பொழுது, தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 210 ஏரிகள் மேம்படுத்தப்படும். கூடுதலாக 1 டி.எம்.சி. நீரை சேமிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம். கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தின் மீது நிர்மலா சீதாராமன் அதிக அக்கறையோடு உள்ளார் என்று கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு