தமிழக செய்திகள்

தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் பதிவு

கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றிருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.