தமிழக செய்திகள்

மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்காமல் தேர்ச்சிக்கு வழி காண வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்காமல் தேர்ச்சிக்கு வழி காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்காமல் தேர்ச்சிக்கு வழி காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டி போட்டிருக்கிற இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, தன்னுடைய குழப்பமானதும், குளறுபடியானதுமான செயல்பாடுகளால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்கால கனவுகளிலும் விளையாடி கொண்டிருக்கிறது.

அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததில் இருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்கு பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதுகுறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை. இந்த நிலையில், முதல்-அமைச்சரின் அறிவிப்பே அவசரமானது, அரைவேக்காட்டுத்தனமானது என்பதையே தற்போது வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தேர்வு இல்லாமல் மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும், தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு என தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை நடத்த தயார் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்திடம் தமிழக அரசு தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. மாணவர்களின் அரியர் தேர்வுகள் மீதான முடிவு குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் அதிருப்திகள் வெளியாவதும், அதனை பூசி மெழுகி மறுத்து, உயர் கல்வித்துறை அமைச்சரும், மற்றவர்களும் ஆளுக்கொரு முரண்பாடான கருத்தை தெரிவிப்பதும், இந்த அரசின் தெளிவில்லாத நிலையையே காட்டுகின்றன.

இத்தகைய கயிறு இழுக்கும் போட்டிகளில் ஈடுபடுவதால் வதைபடுகிறது மாணவர்களின் எதிர்காலம். மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்காதீர். மாணவர்களின் நியாயமான தகுதியான வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண்பீர்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்