தமிழக செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை கேட்போம்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்

தினத்தந்தி

பெரம்பலூர்,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா பெரம்பலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமியும், மற்றவர்களும் முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று கூறுவதை யாரும் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சி சட்டமன்ற தேர்தலில் பெருமளவுக்கு வெற்றி பெறாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்