சென்னை,
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தாதர்-நெல்லை (01021) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி முதல் சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நெல்லை-தாதர் (வண்டி எண்: 01022) இடையே இயக்கப்படும்.
* வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* தாதர்-புதுச்சேரி (01005) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக புதுச்சேரி-தாதர் (01006) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.