தமிழக செய்திகள்

காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ - கே.எஸ்.அழகிரி பேட்டி

காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க போவதாக முதல்-அமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால் இதில் பெரிய அளவில் விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட வேண்டும்.

வேளாண்மை மண்டலம் என்ற அறிவித்தால், அங்கு வேறு தொழில்கள் செய்ய அனுமதி உண்டா என்பது தெரியவேண்டும்.

அனுமதி உண்டு என்றால் எந்த தொழில்கள் செய்யலாம்?. எந்த தொழில்கள் செய்யக்கூடாது? என்ற விவரங்களை தொழில் சார்ந்த அறிஞர்கள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி அறிவிக்க வேண்டும்.

பிற தொழில்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் விவசாயிகள் வளமாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

7 மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. சில மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இதனால் டெல்லி தேர்தல் முடிவுகள் பெரிய விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை