பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது நேரு விளையாட்டு அரங்கம் முன்பு தமிழக பாரம்பரிய கலைகளுடன் சிலப்பாட்டம், சுருள் வாள், மான் கொம்பு உள்ளிட்ட விளையாட்டுகளை சிறுவர்-சிறுமியர்கள் செய்து காண்பித்து, வரவேற்பு அளித்தனர்.
அவர்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் கொடுத்த பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் நடிகர் எஸ்.வி.சேகர் வழங்கினார். அவர்களுக்கு இந்த கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்த பயிற்சியாளர் ஜெயபால் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.