தமிழக செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினத்தந்தி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் சார்பில் கோத்தகிரி பகுதியில் உள்ள முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் 4,700 பேருக்கு இலவச வேட்டி, வேலைகள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் திறன் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகைக்காக மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். ஆலோசகர் சம்பத், செயலாளர் விஜயா ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினர். இதில் சுமார் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்