தமிழக செய்திகள்

"என்ன அடிச்சாலும் தாங்குறாண்டா" வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை ஆகிவிட்டது -நித்யானந்தா கவலை

"என்ன அடிச்சாலும் தாங்குறாண்டா" வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை ஆகிவிட்டது. ஊடகங்கள் முழு நேரமும் என்னை பற்றித்தான் பேசிவருகின்றன என நித்யானந்தா கூறினார்.

சென்னை

கைலாசா என்ற பெயரில் தனி நாடு அமைக்கப்போவதாக ஆரம்பித்த நித்யானந்தா காமெடி தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என அதையும் தனக்கு சாதகமாக்கி பேசி வருகிறார் நித்யானந்தா. உலகில் எங்கே இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கெண்டிருக்கிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் சமூகவலைதளத்தில் தோன்றி சொற்பொழிவாற்றிய நித்யானந்தா,

முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால்தான் அதனை திசை திருப்ப தம்மை பற்றிய செய்திகள் உலாவும், ஆனால் தற்போது ஏதாவது பெரிய பிரச்சினை வரும்போது தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் முழுநேரமும் தம்மை பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்கிற வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை ஆகிவிட்டது.ந

2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன்.

நான் செய்ய வேண்டிய என்னுடைய ஆன்மிக கடமையை தொடர்ந்து எவ்வளவு தடை வந்தாலும் செய்து கொண்டே இருக்கிறேன், இதனால் தமிழர்கள் என்னை ஆன்மிக ரீதியாக எப்போதோ தலைவர் என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருகிறது.

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள், கைலாசா நாட்டை உருவாக்குவேன். இதை செய்து முடித்தே தீருவேன். இதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது. செய்ய முடியுமா? முடியாதா? என்ற பஞ்சாயத்து வந்தால் இப்போதே சொல்லிவிட்டேன், அந்த கடவுளின் அருளால் நான் செய்ய வேண்டிய திருப்பணியாக திருகைலாசத்தை செய்தே தீருவேன், செய்துவிட்டேன், நேரம் வரும் போது இதை அறிவிப்பேன், பஞ்சாயத்து முடிந்துவிட்டது கிளம்பலாம் என்று கூறி முடித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு