தமிழக செய்திகள்

சவாலும் - சவடாலும் விட்டவர்.. எப்போது சைலன்ட் மோடில் இருந்து வெளியே வருவார்..? - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"

"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"

என்று சீறிய முதல்-அமைச்சரின் காதுகளுக்கு இந்த செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?

கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?

#WhySilentCM?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.