தமிழக செய்திகள்

மாலை 3 மணி நிலவரப்படி அதிகமான வாக்குகள் பதிவான தொகுதிகள் எவை..?

தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை,

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி அதிக வாக்குபதிவுகள் பதிவாகி உள்ள 5 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தம் 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிக வாக்குகள் பதிவான முதல் 5 தொகுதிகள்:-

குமாரபாளையம் : 80.67

பெருந்துறை : 77.59

பவானி :77.6

அவிநாசி : 77.43

ஒட்டன்சத்திரம் : 77.35