தமிழக செய்திகள்

இன்று முதல் நடக்கவிருந்த ஆசிரியர்கள் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

இன்று முதல் நடக்கவிருந்த ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-22- ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை கடந்த 28.1.2022 தேதியன்று வெளியிடப்பட்டது.

தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 15-ந்தேதி (இன்று) முதல் நடக்கவிருந்த பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு