தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பணியின் போதுதவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் பணியின் போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி இறந்து போனார்.

தினத்தந்தி

தூத்துக்குடி தேவர் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் தேவர் காலனியில் உள்ள புதிதாக நடந்து வரும் வீடு கட்டும் பணியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, கட்டிடத்தின் மேல் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பேச்சிமுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்