தமிழக செய்திகள்

மாநகராட்சி பூங்காவில் ‘வை-பை’ வசதி

மாநகராட்சி பூங்காவில் ‘வை-பை’ வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள லஸ் நிழற்சாலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நாகேஷ்வரராவ் பூங்காவில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வை-பை வசதியை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 669 பூங்காக்கள் அமைந்துள்ளது. முதல் கட்டமாக தியாகராய நகரில் உள்ள நடைபாதை வளாகத்தில் ஏற்கனவே வை-பை வசதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து லஸ் நிழற்சாலையில் அமைத்துள்ள நாகேஷ்வராவ் பூங்காவில் இந்த வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த வை-பை வசதி 24 மணி நேரமும் தடையில்லாமல் வழங்கப்படும். இந்த பூங்காவில் 8 தூண்களில் வை-பை ஹாட்ஸ்பாட் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தூணில் உள்ள வை-பை ஹாட்ஸ்பாட் வசதியில் 250 முதல் 300 நபர்கள் பயன்படுத்தலாம். வை-பை தொடக்க விழா நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு