தமிழக செய்திகள்

கரும்பு பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்

பழனி அருகே தோட்டத்திற்குள் புகுந்து கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.

தினத்தந்தி

பழனியை அடுத்த பெரியம்மாபட்டி அருகே அய்யர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

நேற்று காலையில் முருகானந்தம் தோட்டத்துக்கு சென்ற போது காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பழனி வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட வனத்துறையினரிடம், தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்