தமிழக செய்திகள்

மங்களம் அருவியில் காட்டாற்று வெள்ளம்

மங்களம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பச்சமலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மங்களம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மரவள்ளிக்கிழங்கு அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.