தமிழக செய்திகள்

சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக கவர்னர் பேசுவதா? கி.வீரமணி அறிக்கை

சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக கவர்னர் பேசுவதா? கி.வீரமணி அறிக்கை.

தினத்தந்தி

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து, தனது பதவியின் மாண்புக்கும், மரியாதைக்கும் இழுக்கும் தேடிடும் வகையில் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் கொள்கைகளை பற்றி விமர்சனம் செய்வது அரசமைப்பு சட்டப்படி அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது. அவருடைய அதிகார வரம்பின் அத்துகளை மீறிய நடவடிக்கை என்பதால் கண்டனத்துக்குரியதாகும்.

ஒரு கவர்னரின் வேலை, அந்த மாநில அரசு திராவிட மாடல் அரசு என்று கூறும்போது, அதற்கு நேர் எதிரான கருத்தை கூறி உள்ளே ஓர் அமைதியற்ற விவகாரத்தை கிளப்பி விடுவதாக உள்ளது. ஏதோ ஒரு உள்ளார்ந்த திட்டத்துடன் இப்படி வலிந்த வம்புகள் தொடங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகமும் பரவலாக இருக்கிறது.

அதை தவிர்த்து, சுமுக உறவுடன் மாநில வளர்ச்சிக்கு, வேலி துணையாக இருக்க வேண்டுமே தவிர, வேலியே பயிரை மேய்வதாக இருப்பது கூடாது. இந்திய அரசமைப்பு சட்ட விதிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும் அவரது பதவியின் பெருமைக்கும் கூட அது விரோதமானது ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்