தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

தினத்தந்தி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு கரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் ராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்த 2 மகன்களின் படிப்பு செலவுக்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பென்சிகர் ராஜ் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் ராஜகுமாரி மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனிமையில் இருந்த ராஜகுமாரி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அப்போது வீட்டுக்கு வந்த இளைய மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு