தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு பெண் பலி

நெல்லையில் ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்.

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் குறிச்சி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண், அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பலியானார். அவரது கையில் பார்வதி என்றும் தேள் உருவ பச்சை குத்தப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...