தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் சாவு

மறைமலைநகரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பூங்குன்றனார் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு