தமிழக செய்திகள்

பண்ருட்டி அருகேஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

பண்ருட்டி, 

பண்ருட்டி காடாம்புலியூர் அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் தில்லைகோவிந்தன். இவருடைய மனைவி மணியரசி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே தில்லைகோவிந்தன் தனது மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். காடாம்புலியூர்-பண்ருட்டி சாலையில் சென்றபோது, மணியரசிக்கு பிரசவ வலி அதிகமானதால் அலறினார். இதைகேட்ட ஓட்டுனர் செல்வகுமார் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜெரோம் ஆம்புலன்சிலேயே மணியரசிக்கு பிரசவம் பார்த்தார். அதில் மணியரசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்