தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலி

ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

தினத்தந்தி

ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன் விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 55). இவர் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தழைபறிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை