தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

நத்தம் அருகே உள்ள கல்வேலிபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி போதும்பொண்ணு (வயது 49). நேற்று இவர், துணியை துவைத்து விட்டு வீட்டருகே உள்ள கம்பியில் காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது அதன் அருகே இருந்த மின்கம்பியில், அவரது கை பட்டு விட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே போதும்பொண்ணு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போதும்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு