தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலி

நஞ்சுகொண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமம், மேற்கு கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 55). இவர், மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றுவதற்காக 'சுவிட்ச்' போட்டுள்ளார்.

அப்போது மோட்டார் இயங்காததால் மின் ஓயர் கட்டாகி உள்ளதா? என பரிசோதிக்க மின் ஓயரை கையில் எடுத்து பார்த்து உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை