தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி

நரிக்குடி அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.

காரியாபட்டி, 

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் வேளானூரணி குரூப், உலகத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூரணம்(வயது 55). இவர் பருத்தி காட்டில் செடிகளுக்கு களை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் பூரணம் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூரணம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்