தமிழக செய்திகள்

மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பலி

மேல்மலையனூர் அருகே கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம், 

மேல்மலையனூர் அருகே செல்லபிராட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி தாட்சாயிணி (வயது 46). இவர் இன்று காலை வயலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். அங்குள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த கார் தாட்சாயிணி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...