சென்னை,
உலகின் இயக்கத்திற்கு காரணிகளாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்வதேச மகளிர் தின வாழ்த்து கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; ’உலகின் இயக்கத்திற்கு காரணிகளாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். இன்றைய நாளில் மாவட்டக் கழக மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டோம்.
திராவிட அரசில் வெல்லும் தமிழ்ப் பெண்களாக மிளிரும் அனைவரும் சமூக பொருளாதார விடுதலைப் பெற்று, அடக்குமுறையாளர்களையும் சாதனைகளால் வெல்வீர்கள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டங்கள் உங்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும்’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.