தமிழக செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

காரியாபட்டியில் தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி சார்பாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், கலை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் நாட்டுப்புற கலைஞர்கள் கணக்கெடுக்கும் பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காரியாபட்டி சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். தேவாங்கர் கல்லூரியின் முதல்வர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ஸ்டீபன் பொன்னையா, உதவி பேராசிரியர் கந்தசாமி, நாதஸ்வர கலைஞர் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நாட்டுப்புற கலைஞர்கள் கணக்கெடுக்கும் சிறப்பு முகாமில் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை