தமிழக செய்திகள்

பூதப்பாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பூதப்பாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் ரைஸ்மில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் நாகர்கோவில் பகுதியில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வரும் குமார் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம்.

அதன்படி நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் கோபத்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் காட்டுப்புதூர் அருகே உள்ள மூங்கிலடி ஊற்றுப் பகுதியில் குமார் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற குமார் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து