தமிழக செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மேல மாநாட்டைச் சேர்ந்த பாண்டி மகன் லட்சுமணன் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலையில் இவரது மனைவி கிருஷ்ணதேவி (31) கூலி வேலைக்கு சென்று விட்டார். லட்சுமணன் மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் மதியம் லட்சுமணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து