தமிழக செய்திகள்

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

வடசேரி வாத்தியார்விளையை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 46). இவர் இறச்சகுளத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஒரு தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். மகேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்ட அவர் வேலைக்கு செல்லாமல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் மனைவி வேலைக்குச் சென்றபிறகு வீட்டில் தனியாக இருந்த மகேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார், மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்