தமிழக செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குடியாத்தத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

குடியாத்தம் கஸ்பா புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38), கூலி தொழிலாளி. நேற்று காலையில் கஸ்பா சுடுகாடு அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் உள்ள கூரையில் வெங்கடேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்