தமிழக செய்திகள்

பாலத்தின் கீழ் தொழிலாளி பிணம்

பாலத்தின் கீழ் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

தினத்தந்தி

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 46). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு நாராயணன் மெய்யப்பன்பட்டி பகுதியில் உள்ள ஓடை பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் பாலத்திற்கு அடியில் நாராயணன் பிணமாக கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று நாராயணன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் எப்படி இறந்தார்? என விசாரித்து வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்